சோகமே உருவாய் அழுதபடி சங்கீதா, கணவன் ரமேஷின் தோளில் சாய்ந்திருந்தாள். இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகர கியூப்ஹால் ஹாஸ்பிடல் பரபரப்பாய் இயங்க ஆரம்பித்திருந்தது. அவர்களது ஏழு வயது மகள் நிலா ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியோடு சுவாசித்து கொண்டிருந்தாள்.
"என்ன கொடுமைங்க இது, அழகா விளையாடிக்கிட்டிருந்தவ இப்படி" மேலும் பேசமுடியாமல் விம்மினாள் சங்கீதா. "இதுக்கலாம் போய் அழுதுக்கிட்டு", உள்ளுக்குள் வேதனையோடு அவளை தேற்றினான் ரமேஷ்.
செல் கணைத்தது, நண்பன் சுகுமார், "டேய் இப்பதாண்டா கொவற்றியிலேந்து, வெஸ்ட் மிட்லாண்ட் டிரைன்ல வந்தேன், ஏதோ முக்கியமா வரசொன்னே, எங்க இருக்கடா?" , விலாசம் கேட்டதும் அதிர்ந்தான். "நீ இங்க வாடா, சொல்றேன்" கட் பண்ணிணான் ரமேஷ்.
காரிடாரில் நடந்தபடி நிலாவின் இதய கோளாரை சுகுமாருக்கு விளக்கினான். "நான் தைரியமாத்தான் இருக்கேன், கீதாதான் ரொம்ப நொடிஞ்சுட்டா" என்றான்.தனது கம்பெனி விஷயமாய் ஜெர்மனி செல்ல வேண்டியதை சொன்னதும் "இத பத்தி நீ கவல படாதே, லீவு போட்டுட்டு நான் இருக்கேண்டா,நீ கெளம்பு" என ஆறுதலாய் சொன்ன சுகுமாரிடம் , " டேய் சுகு, எல்லாம் நான் செஞ்ச பாவம்டா, நான் ஏங் காலேஜ் ஃபிரண்ட் பிரியாவுக்கு செஞ்ச காதல் துரோகத்துக்கு, ஆண்டவன் குடுத்துட்டாண்டா", என்ற ரமேஷிடம், "விடுடா நீ, பழசெல்லாம் பேசிக்கிட்டு" என்றான் சுகுமார்.
நான்கு நாள் கழித்துவந்த கணவனிடம் மகிழ்ச்சியாய் சொன்னால் சங்கீதா, "இப்ப நல்லா இருக்காங்க நிலா, எல்லாம் அந்த நர்ஸ்தாங்க, சொந்த பிள்ள மாதிரி பார்த்தாங்க, அவங்க மூணு நாளா தூங்கவேயில்ல, நாம போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம், கடவுளா பாத்து அனுப்பியிருக்கான், அவங்க கோயமுத்தூராம்,ஏன் வயசு தான் இருக்கும், பாவம் இன்னும் கல்யாணமாகல,சுகுமாரண்ணன் மூணாவது மாடியில டிபன் வாங்க போனாங்க". திரும்பியவுடன் நுழைந்தான் சுகுமார். "ரொம்ப தேங்ஸ்டா சுகு" என தேநீரருந்திக் கொண்டிருந்த
டம்ளரோடு நண்பனைக் கட்டிக்கொண்டான். "ஏங்க, இவங்க தாங்க அந்த நர்ஸம்மா", என சங்கீதா நர்ஸை அறிமுக படுத்தியபோது டக்கென்று நழுவிய டம்ளர் தரையிலே சிலீரென நொறுங்கியது, பித்து பிடித்தவனாய் விக்கித்த ரமேஷ் முன்பு நர்ஸம்மா, குழப்பமாய் நின்றனர் சங்கீதாவும், சுகுமாரும். பாவம் அவர்களுக்கு தெரியாது, நர்ஸம்மா தான் பிரியா என்று.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment