Tuesday, 28 November 2006

கலைஞர் ஒரு ஜனநாயக விரோதி???

தி.மு.க அரசு ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது, அவரது பேரன் கலாநிதி மாறன் இந்தியாவின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். வெளியிலிருந்து பார்த்தால் சாதாரணமாக தெரியும் இந்த விசயம் சர்ச்சைகுறியது தான். ஏனென்றால் அவரது துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாண MEDIA-Journalism( பத்திரிக்கை துறை). ஒரு ஆட்சியாளர் தன்னிடம் இருக்கும் எழுத்து ஆயுதத்தை பயன்படுத்தி உண்மைகளை மறைக்க முடியும். கலைஞருக்கு சாதகமானவர் கலாநிதி என்பது வெளிச்சம்.
இது நியாயமா? என்ற நம்முடைய கேள்விக்கு முன்னர் நாம் பார்க்க வேண்டிய விசயங்கள் சில நம்முன்னே கிடக்கின்றன. உதாரணமாக, ஒரு சாமி சிலையை நல்லெண்ணத்தின் காரணமாக இடம் மாற்றி வைக்கும் ஒரு சிறுபான்மை சகோதரரை "தீவிரவாதி"யாகவும், அதே செயலை கெட்ட நோக்கோடு ஒரு இந்து செய்தால் "குறும்புக்கார பக்தராகவும்" சித்தரிக்கும் "தினமலர்" போன்ற உயர்ந்த(???!!) பத்திரிக்கைகள், "சாணக்கி "யரும் ", சந்திர குப்த மெளரி"யனும்" " என ஊசி ஏற்றும் "மதன்" போன்ற "உயந்த(??!!)" பத்த்ரிக்கையாளர்களும், "கண்ணகி சிலையை கரடி பொம்மையோடு சாமர்த்தியமாக கையாளும் "ஞானி" போன்ற நல்லவர்(???)களும், "பரம்பரை"யுத்தம் என முழக்கமிடும் ஜெயலலிதாக்களும், "சோ" போன்ற பார்ப்பன நீதிமான்(???)களும், பத்திரிக்கை உலகிலிருந்து என்று வெளியேறுகிறார்களோ... அன்று உடனடியாக கலாநிதி மாறன் தன் மூட்டை முடிச்சிகளோடு கோபலபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் கலைஞரிடம் குமுதம் துளைத்தபோது "ஆளுங்கட்சிக்கு பரிவட்டம் கட்டுவதை பத்திரிக்கைகள் தவிர்க்க வேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்தினார். அவருக்கு வேறு வழியில்லை என்று தான் நினைக்க தோன்றுகிறது, தினமலர் போன்ற பத்திரிக்கைகளின் செய்திகளை வாசிக்கும் போது........ ஆம், அவரது இந்த முடிவும் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க, கலாச்சார பேரழிவை தடுக்க அவர் நடத்தும் அரசியல் வேள்வி என புரிந்து கொள்ள முடிகிறது.

No comments: